00:00
04:22
தற்போது இந்த பாடலின் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கவில்லை.
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
♪
வானம் என்றால் தலைக்கு மேலே
இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே
உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
Ok
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
♪
தொடரும் போட்ட கதையை போல
எந்தன் மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே
எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே
வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே
கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி
பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம்
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி
Come on
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே
நானா நன் நானாநானா நானா நன் நானாநானா
நானா நன் நானாநானா நானா நன் நானாநானா