00:00
04:40
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது?
அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று
♪
மாமர இலை மேலே
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
மாமர இலை மேலே
மார்கழி பனிப் போலே
பூமகள் மடிமீது
நான் தூங்கவோ?
மாமர இலை மேலே
மார்கழி பனிப் போலே
பூமகள் மடிமீது
நான் தூங்கவோ?
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ?
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது?
அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று
♪
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ?
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ?
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ?
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ?
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது?
அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று