00:00
04:18
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா என்
அழுகையும் கேக்குதா அந்த
ரயிலின் அடியில் சிக்கி செதறி
இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா
இப்ப உடனே நான் உன்ன பாக்கணும்
மூக்கில் முகம் வச்சி ஒரசனும்
உன் நாக்கில் நக்கி என் அழுக்க
கழுவி போகணும் எங்க
வந்தா உன்ன பாக்கலாம்
யார் அந்த காட்டில்
ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல
நானா நானா இல்ல நீயா நீயா
நானா நானா நீயா கருப்பி
இறந்தது நீயா இருப்பது நானா
இருப்பது நீயா இறந்தது நானா
நம்மள கொன்னவன் யாருன்னு
எனக்கு நல்ல தெரியும்
அங்க செத்தது யாருன்னு
அவனுக்கு மட்டும் தான் புரியும்
அழிஞ்சது நீயா
அழுவது நானா
அழுவது நீயா
அழிஞ்சது நானா
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
எந்திரி கருப்பி
அம்மா கூப்புடுறா குளிக்க
போகணும் எந்திரிடி ஏன் டி
பேசல என் கூட என்னடி
நடந்திச்சி அங்க
வலிய தாங்காம துடிச்சியா
கடைசி நிமிஷம் என்ன நெனைச்சியா
உன்ன கொல்லும் போது
அவன் சிரிச்சானா
நீ கொரைக்கும் போது
அவன் மொறைச்சானா
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
உன் கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே
கேட்டியா யார் கூப்டு நீ போன
ஏன் டி போன
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
எல்லா மனுசனும் இங்கே ஒன்னு இல்லன்னு
வளத்து அணைக்குறவன்
கழுத்த நெரிக்கிறவன்
கண்ண தடவுறவன்
கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன்
நின்னு அழுகுறவன்
கருப்பன் செவப்பன்
சாமி சாத்தான் அடிமை
ஆண்டான் மயிரு மட்ட
ஆயிரம் மனுஷன் உண்டுன்னு
உனக்கு அப்போவே சொன்னேன்
கேட்டியா நீ
இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் கருப்பி
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு
நான் என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ
ரெண்டு காலிலோ
நாலு காலிலோ
இந்த மண்ணிலே உலவிட்டு
கெடக்க நாய் இல்லடி நீ
நான் இல்லையா நீ