background cover of music playing
Nandri Solla Unaku (From "Marumalarchi") - Unnikrishnan

Nandri Solla Unaku (From "Marumalarchi")

Unnikrishnan

00:00

03:40

Similar recommendations

Lyric

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க

நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச

தவத்தாலே நீ கிடைச்ச

பசும்பொன்ன பித்தளையா

தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு

ஏன்மா சஞ்சலம்

உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்

செவ்விளனி நான் குடிக்க

சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்

கள்ளிருக்கும் தாமரைய

கையணைக்கும் வான்பிறைய

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும்

உனைச் சேர காத்திருப்பேன்

விழிமூடும் இமை போல

விலகாமல் வாழ்ந்திருப்பேன்

உன்னப் போல தெய்வமில்ல

உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அர்ச்சனைதான்

எனக்கு வேறு வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

என்னுடய மனச தந்துவிட்ட பிறகு

ஏம்மா கலங்குற?

வங்கக் கடல் ஆழமென்ன

வல்லவர்கள் கண்டதுண்டு

அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே?

என்னுடைய நாயகனே

ஊர் வணங்கும் நல்லவனே

உன்னுடைய அன்புக்கு

அந்த வானம் எல்லையே

எனக்கென வந்த தேவதையே

சரிபாதி நீயல்லவா

நடக்கையில் உந்தன் கூடவரும்

நிழல் போலே நானல்லவா

கண்ணன் கொண்ட ராதையென

ராமன் கொண்ட சீதையென

மடி சேர்ந்த பூரணமே

மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

என்னுடய மனச தந்துவிட்ட பிறகு

ஏம்மா கலங்குற?

நெடுங்காலம் நான் புரிஞ்ச

தவத்தாலே நீ கிடைச்ச

திருக்கோவில் வீடுயென்று

விளக்கேற்ற நீயும் வந்த

நேரில் வந்த ஆண்டவனே

- It's already the end -