00:00
04:15
"பச்சை வண்ணா" என்பது யுவான் ஷங்கர் ராஜா இசையமைத்த ஒரு புகழ்பெற்ற தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடல் அதன் இனிமையான மெலோடியும், கவிதைபூர்வமான வரிகளும் காரணமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய "பச்சை வண்ணா" பாடல், இசை வரிகள் மூலம் காதலின் நுட்பங்களை அழகிய முறையில் விவரிக்கிறது. யுவான் ஷங்கர் ராஜாவின் தனிச்சிறப்பான இசை ஸ்டைல் இதை மேலும் சிறப்பிக்கிறது.
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில்
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேல பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே
பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே