00:00
04:59
"மரந்தாயே" என்பது 2016 ஆம் ஆண்டில் வெளியாகிய தமிழ் திரைப்படமான "தர்மா தொடரை"வில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடல் ஆகும். இந்த பாடலின் இசை டி. இம்மான் அவர்களால் அமைக்கப்பட்டது மற்றும் பாடியவர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்வேத மோகன் ஆவார்கள். எழுத்தாளர் யுகாபாரதி. இந்த பாடல் காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அழகிய மெட்டங்களும் மென்மையான குரல்களும் இதை சிறப்பிக்கின்றன.
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா
தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணாமல் போனாய்
யாரடி யாரடி
நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடி
யாரடி யாரடி
பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
♪
முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதயுமில்லை உரமும்மில்லை மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
இது வரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
ஆஅ... ஆ... சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே
உனை காணா உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை
யாரடி, ஹா...
யாரடி, ஹா...
நான் இனி யாரடி, ஹா...
ஓர் துளி, ஹோ...
ஞாபகம், ஹோ...
ஊறுதா பாரடி, ஹா...
யாரடா யாரடா
நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே...