background cover of music playing
Parthu Parthu (From "Nee Varuvaai Ena") - S. P. Balasubrahmanyam

Parthu Parthu (From "Nee Varuvaai Ena")

S. P. Balasubrahmanyam

00:00

04:31

Song Introduction

இந்த பாடலுக்கான தகவல்கள் இப்போது கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாய் என

பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்

நீ வருவாய் என

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாய் என

நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாய் என

பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்

நீ வருவாய் என

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென

தினம் தினம் சேகரித்தேன்

குமுதமும் விகடனும் நீ படிப்பாயென

வாசகன் ஆகி விட்டேன்

கவிதை நூலோடு கோலப் புத்தகம்

உனக்காய் சேமிக்கிறேன்

கனவில் உன்னோடு என்ன பேசலாம்

தினமும் யோசிக்கிறேன்

ஒரு காகம் கா என கரைந்தாலும்

உன் பாசம் பார்க்கிறேன்

நீ வருவாய் என

நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாய் என

பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்

நீ வருவாய் என

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்

நிலவுக்கும் ஜோடியில்லை

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட

கவிதைக்கும் கால்கள் இல்லை

உலகில் பெண் மக்கள் நூரு கோடியாம்

அதிலே நீ யாரடி?

சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்

எங்கே உன் காலடி?

மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து

இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாய் என

நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாய் என

பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்

நீ வருவாய் என

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாய் என

நீ வருவாய் என

நீ வருவாய் என

நீ வருவாய் என

- It's already the end -