background cover of music playing
Pularaadha - Sid Sriram

Pularaadha

Sid Sriram

00:00

04:21

Similar recommendations

Lyric

புலராத காலை தனிலே

நிலவோடு பேசும் மழையில்

புலராத காலை தனிலே

நிலவோடு பேசும் மழையில்

நனையாத நிழலை போலே

நனையாத நிழலை போலே

ஏங்கும் ஏங்கும் காதல்

புணரா காதலே

புணரும் காதலே

அழலாய் காதலே

அலறும் காதலே

முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே

உன் இதழை என் இதலும் போர்த்தி விடும்

உள்ளுணர்வில் பேரமைதி கனிந்து வரும்

நம் உடலில் பூதம் ஐந்தும் கரைந்து விடும்

தீராமல் தூருதே (தூருதே)

காமத்தின் மேகங்கள் (காமத்தின் மேகங்கள்)

மழைக்காடு பூக்குமே

நம்மோடு இனி இனி

புணரா காதலே

புணரும் காதலே

அழலாய் காதலே

அலறும் காதலே

புலராத காலை தனிலே

நிலவோடு பேசும் மழையில்

புலராத காலை தனிலே

நிலவோடு பேசும் மழையில்

கண்ணே கண்ணே கீச்சொலியே கீச்சொலியே

நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே

உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே

ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும்

கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ளச்சிரிப்பும்

இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும்

காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும்

பேசாத பாசையாய் (பேசாத பாசையாய்)

உன் தீண்டல் ஆகுதே (உன் தீண்டல் ஆகுதே)

தானாக பேசுமே

என் மௌனம் இனி இனி

- It's already the end -